Designed by Iniyas LTD
கடும் சீற்றத்துடன் அமெரிக்காவை தாக்கிய புளோரன்ஸ் புயல் ..
அமெரிக்காவின் கடலோர பகுதிகளை இன்று புளோரன்ஸ் புயல் தாக்கியதையடுத்து, பலத்த காற்று வீசுவதால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 1.5 லட்சம் மக்கள் இருளில் தவிக்கின்றதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அமெரிக்காவில் மழைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி சென்ற நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் அமெரிக்காவை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட்டிருந்தது.
30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அதிகாரிகள் எச்சரித்ததையடுத்து , புயல் தாக்கும் என கணிக்கப்பட்ட வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
3 மாகாணத்திலும் உள்ள கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
மேலும் கடற்கரை பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு 1500க்கும் மேற்பட்ட விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்த பதற்றமான சூழ்நிலையில், வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கத் தொடங்கியது.
ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலைகள், கரையோர பகுதிகளை தாக்கியதோடு, தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அமெரிகாவில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.