Designed by Iniyas LTD
இரணைப்பாலை வீதியில் மாட்டுடன் மோதி விபத்து இளைஞன் படுகாயம்!
புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து இரணைப்பாலை வீதியில் நேற்று முன் தினம் (19) இரவு கட்டாக்காலி மாட்டுடன் மோதுண்ட இளைஞன் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் குறித்த இளைஞனின் பெறுமதி மிக்க உந்துருளி படுசேதமடைந்துள்ளது
விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு போலீசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்
புதுக்குடியிருப்பு சந்தியில் இருந்து நான்கு பக்கமும் செல்லும் முதன்மை வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகள் அதிகாரித்து காணப்படுகின்றன.
கால்நடை உரிமையாளர்கள் கால்நடைகளை இரவு வேளை வீட்டில் பட்டியில் கட்டவேண்டும் என பிரதேச சபையினால் பலதடவைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை உரிமையாளர்கள் கால்நடைகளை இரவு நேரங்களில் பட்டிகளில் அடைப்பதிலை எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.
இதனால் விபத்துக்கள் ஏற்படுவதும் அதிகளவான பொருட்சேதங்கள் ஏற்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.