இடைத்தேர்தலில் வென்று புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடர்ந்து இரண்டாம் நாளாக 02-04-2017 (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியளவிலும் மாலை 4 மணியளவிலும், இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் 39 வது வட்டத்தில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதனைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு, சுங்கச்சாவடி, எம்.ஜி.ஆர் சாலை அருகே சீமான் தலைமையில் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.