இலங்கையில் எந்தவிதமான ஜிஹாதிய அல்லது இஸ்லாமிய இயக்கங்களும் இயங்கவில்லை என கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கி வரும் சர்வதேச இன ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட ரீதியில் ஒன்றிரண்டு பேர் இவ்வாறான இயக்கங்களுடன் இணைந்து கொண்டாலும், அமைப்பு ரீதியான தொடர்புகள் எதுவும் கிடையாது என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்தோடு, பள்ளிவாசல் நிர்வாகங்களும் இவ்வாறான இயக்கங்கள் பற்றி போதிப்பதோ அல்லது இயக்கங்களில் இணைந்து கொள்ளுமாறு ஊக்குவிப்பதோ கிடையாது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.