மேலும் இந்தச் சூழலில் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க சாகித்ய அகாடமி செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் கூடியது. சாகித்ய அகாடமி தலைவர் விஷ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் எழுத்தாளர்கள் கொல்லப்பட்டதற்கு செயற்குழுவில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பல்வேறு சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவித்து சாகித்ய அகாடமி விருதைத் திருப்பிக் கொடுத்தவர்கள் மீண்டும் விருதினை திரும்பப்பெற வேண்டும் என்று சாகித்ய அகாடமி வேண்டுகோள் விடுத்துள்ளது.