சார்க்கில் இலங்கை கலந்துகொள்ளாதது கவலையாம்! பீரிஸ்

பாகிஸ்தானில் எதிர்வரும் 9 ஆம் 10 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கு இலங்கை மேற்கொண்ட தீர்மானம் கவலையளிப்பதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை சார்க் உச்சி மாநாட்டை நடாத்தும் அளவுக்கு சிறந்ததல்லவென வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.இலங்கையின் இந்த   தீர்மானம் குறித்து ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கைகவலைசார்க்பாக்கிஸ்தான்பீரிஸ்புறக்கணிப்பு ;மாநாடுவெளிவிவகார அமைச்சு
Comments (0)
Add Comment