இராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 30 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட் கிழமை 2014-02-03கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் 8 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
இவர்கள் காங்கேசன்துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மீன்பிடி அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். இதேபோல், நாகப்பட்டினம், ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த 4 மீனவர்கள் பைபர் படகில் நேற்று மீன்பிடிக்கச் சென்ற வேளை இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.