புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதற்கு எதிராக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.
புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட விதம் சட்டவிரோதமானது, அரசியலமைப்பிற்கு எதிரானது என இன்று காலையில் ஜேவிபி நம்பிக்கயில்லா பிரேரணையொன்றை சமர்ப்பித்திருந்தது.
இது இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டபோது, அரசு தரப்பில் இருந்து கூச்சலிட்டு அதை குழப்பும் முயற்சிகள் நடந்தேறியுள்ளது.
இதையடுத்து, குரல் வழி பெரும்பான்மையை உறுதிசெய்த சபாநாயகர், புதிய அரசில் நம்பிக்கையில்லையென்ற பிரேரணை வெற்றியடைந்ததாக அறிவித்துள்ளதாக மேலும் தெரிவிகப்பட்டுள்ளது.