தலைமை தகவல் ஆணையராக பதவி வகித்து வந்த விஜய் ஷர்மாவின் பதவிக்காலம் டிசம்பர் 1 ஆம் தேதியோடு முடிவடைந்ததையடுத்து ஆர்.கே மாத்தூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதாவது தனது 65 வயதை பூர்த்தி செய்யும் வரை இவர் அப்பகுதியில் இருப்பார்.
கான்பூர் ஐஐடி-யில் படித்த ஆர்.கே மாத்தூர் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார்.