அடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா?

பிரச்னை அடிக்கடி காலோடு சிறுநீர் வந்து விடுவதைப் போல உணர்வார்கள் சிலர்… அல்லது இருமல்  வரும்போதோ, தும்மல் வரும் போதோ சிறுநீர் துளி எட்டிப் பார்க்கும்! அப்படியென்றால் ‘கட்டுப்பாடற்ற சிறுநீர் கழிதல் (ஓவர்ஆக்டிவ் பிளாடர்)’ பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம்.

இது சிறுநீரகங்களை பழுதாக்கும் சைலன்ட் கில்லர். நம்நாட்டில் 40 முதல் 60 வயதுடைய பெண்களில் 25 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வு. ‘‘நம் உடலில் 400 மி.லி.சிறுநீரை மட்டுமே சிறுநீர்ப்பையில் தேக்கிவைக்க முடியும். அந்த அளவுக்கு சிறுநீர் சேர்ந்துவிட்டால் சாதாரனமாகவே   சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும். ஆனால், சிலருக்கோ இதில் பாதி அளவுக்கு சிறுநீர் தேங்கியிருக்கும்போதே சிறுநீர்  வருவது போன்று தோன்றும். சிலர் அதை அடக்கி வைப்பார்கள்.அதிகப் படியாக 300 மி.லி. வரை அவர்களால் தாக்குப் பிடிக்க முடியும்.

அதற்கு  மேல் காலோடு சிறுநீர் வருவது போல் இருக்கும். எனவே பாத்ரூம் நோக்கி ஓடுவார்கள். சிறிது நேரத்தில் மீண்டும் இதே பிரச்னை வரும். 400 மி.லி. சிறுநீரை தேக்குபவர்கள் சராசரியாக தினமும் பகலில் 2 & 3 முறையும், இரவில் ஒருமுறையும் சிறுநீர் கழிப்பார்கள். இது சாதரணமாக  நடப்பது. ஆனால், 200 அல்லது 300 மி.லி. தேங்கும்போதே அடிக்கடி சிறுநீர் வந்தால் அது ஏதோ ஒரு பிரச்னையின் ஆரம்பம்  என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்’’என்கிறார் சென்னை அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் ‘‘நம் மக்களை ஒரு விதத்தில் பாராட்டியே தீர வேண்டும்.

இரவில் அடிக்கடி சிறுநீர் வந்தால் நீரிழிவு நோய்  இருக்குமோ என்று பயந்து பரிசோதனை செய்து  கொள்கிறார்கள். அதாவது, அடிக்கடி சிறுநீர் வர நீரிழிவு நோய்  காரணம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், அதுமட்டுமே முழு காரணமல்ல. கட்டுப்பாடற்ற சிறுநீர் வர சிறுநீர் பையில் காச நோய் ,தொற்று, புற்றுநோய் மற்றும் மன அழுத்தம் ஆகியவையும் காரணங்களாக இருக்கலாம். இவற்றில் எந்த காரணத்தால் சிறுநீர் அடிக்கடி வருகிறது  என்பதை பரிசோதிக்க வேண்டும். நீரிழிவு நோய் இல்லை என்று தெரிய வந்தால், அதற்கு அடுத்து பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். முன்பு இந்த பிரச்னைக்கு சிகிச்சைகள் இல்லாமல் இருந்தது. இப்போது ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளன. அதற்கான  டெஸ்ட் செய்தால் காரணத்தை சுலபமாக அறிய முடியும்.

2 முதல் 3 மாதங்களில் மருந்து,மாத்திரைகள் மூலம் இந்தப்பிரச்னையை சரி செய்ய முடியும். இதற்கென்றே சில உடற்பயிற்சிகளும் உள்ளன’’ என்று கூறும் டாக்டர் துரைசாமி, ‘‘இந்நோய் ஆண்களைவிட பெண்களையே அதிகம் தாக்குகிறது. பிரசவ நேரங்களிலும், ஆபரேஷன் மூலம் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களுக்கும் இந்தப் பிரச்னை அதிகமாக  இருக்கும். இதேபோல, கர்ப்பம் தரிக்கும் முதல் 2 முதல் 3 மாதங்களுக்கு பெண்களுக்கு அடிக்கடி இப்பிரச்னை தோன்றும்.பின்னர், தானாகவே  சரியாகி  விடும்.

இதுபோல மெனோபாஸ் காலங்களிலும் இந்நோய்  பெண்களுக்கு ஏற்படும். பொதுவாக இருமும் போதோ தும்மும் போதோ சிறுநீர் வந்துவிடுவதே இந் நோய்க்கான அறிகுறி’’ என்கிறார். ‘‘சில ஆண்களுக்கு சிறுநீர் வெளியேறிமுடித்த சிறிது நேரத்திலேயே மீண்டும் துளித்துளியாக வந்து கொண்டே இருக்கும். இதற்கு விந்துச்சுரப்பியில் ஏற்படும் அடைப்பே காரணம்.

எப்போதும் சராசரி மனிதனால் கூட முழுமையாக சிறு நீரை வெளியேற்ற முடியாது. 30 முதல் 40 மி.லி. வரை சிறுநீர் பையில் தேங்கியே இருக்கும். இது சாதாரண  அளவு. இன்னும் அதிகமாக இருந்தால் பிளாடர் பம்ப் வேலை செய்யவில்லை என்று அர்த்தம். உடனே மருத்துவரைப் பார்ப்பது அவசியம். மேற்கூறிய  எல்லா பிரச்னைகளையும் கண்டு கொள்ளாமல் விடால் சிறுநீரகங்கள் செயலிழக்கும் அபாயம் உள்ளது…’’என்று எச்சரிக்கிறார் டாக்டர் கட்டுப்பாடற்ற சிறுநீர் வர  சிறுநீர் பையில் காசநோய், தொற்று, புற்று நோய் மற்றும் மன அழுத்தம் ஆகியவையும் காரணங்களாக இருக்கலாம்.

அடிக்கடிஉணர்கிறீர்களாசிறுநீர்போல்வருவதை
Comments (0)
Add Comment