அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த நதானியல் பிரசாத் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
இவரை ஒரு குற்ற வழக்கிற்காக போலீசார் தேடி வந்துள்ளனர்.
இந் நிலையில் பிரீமாண்ட் பகுதியில் இவர் ஒரு காரில் சென்று கொண்டிருந்போது அவரை பார்த்த போலீசார் அது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதை தொடர்ந்து சேர்ந்த நதானியல் பிரசாத்தை பிடிக்க பொலிஸார் மேற்கொண்டபோது, காரில் இருந்து இறங்கி பிரசாத் தப்பி ஓடியுள்ளார்.
அவரை துரத்தி சென்ற போலீஸ் அதிகாரிகள் அங்குள்ள பெட்ரோல் நிலையம் அருகே அவரை மடக்கி பிடிக்க முயன்றபோது, அவர்களை நோக்கி பிரசாத் துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
போலீசாரும் அவரை நோக்கி திருப்பி சுட்டதால குண்டு பாய்ந்து பிரசாத் பரிதாபமாக இறந்துள்ளார்.
இதேவேளை காரை ஓட்டி வந்த பிரசாத்தின் தாயார் பிரீமான்ட் போலீசில் சரண் அடைந்துள்ளார்.