அ.தி.மு.க வை குப்பைகளை போல் அகற்றுங்கள்!

சென்னையில் குப்பைகளை அகற்ற துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டது போன்று, ஆட்சியில் உள்ள குப்பைகளை அகற்ற மக்கள் ஒன்று சேர வேண்டும் என்று ஆர்.கே.நகரில் நமக்கு நாமே 4ம் கட்ட பயணத்தைத் தொடங்கிய மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மூலம் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். கன்னியாகுமரி தொடங்கி திருவள்ளூர் வரை 3 கட்டமாக பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின்.
தொழிலாளர்கள், மகளிர் குழுவினர், மாணவர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். தற்போது சென்னை ஆர்.கே.நகரில் 4ம் கட்ட பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.
அ.தி.மு.க வைஅகற்றுங்கள்குப்பைகளைபோல்
Comments (0)
Add Comment