திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மூலம் மக்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வந்துள்ளார். கன்னியாகுமரி தொடங்கி திருவள்ளூர் வரை 3 கட்டமாக பயணம் மேற்கொண்டார் ஸ்டாலின்.
தொழிலாளர்கள், மகளிர் குழுவினர், மாணவர்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார். தற்போது சென்னை ஆர்.கே.நகரில் 4ம் கட்ட பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.