நேற்று 5 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து இதுவரை மொத்தம் 27 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர்(சி.பி.ஐ.) சி.மகேந்திரன் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி சவுரிராஜனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. மனுக்கள் மீதான பரிசீலனை 11-ந்தேதி நடக்கிறது. வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கு 13-ந்தேதி கடைசி நாளாகும்.