இந்தியா செல்கிறார் ரணில்!

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்காவின் துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

‘ஐ.நா வெசாக் நாள் கொண்டாட்டங்கள் இம்முறை சிறிலங்காவில் பிரமாண்டமாக கொண்டாடப்படவுள்ளது. பல நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்வில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார்.

இந்தியப் பிரதமரின் சிறிலங்கா பயணத்துக்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வார்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாஇலங்கைபயணம்பிரதமர்புதுடெல்லிமோடி
Comments (0)
Add Comment