மேலும் இதுதொடர்பாக கண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா,
65 நாட்கள் மீன்பிடிக்க பரிந்துரைக்கும் இந்தியாவின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், இலங்கை கடற்பிரதேசத்தில் இந்திய மீனவர்களை 65 மணி நேரம் கூட அனுமதிக்க மாட்டோம் எனவும் உறுதிப்பட தெரிவித்தார்.
இந்நிலையில் ஏற்கனவே மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இவற்றில் 65 நாட்களுக்கு இந்திய மீனவர்களை இலங்கை பகுதியில் மீன்பிடிக்க அனுமதிப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. இதன்மூலம் இருநாட்டு கடற்பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்க முடியும் என மீனவர் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர். இருநாட்டு மீனவர்களும் அமைதியாக தங்கள் தொழிலை மேற்கொள்ள வழிவகைச் செய்யும் என்றும் விளக்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.