இந்தோனேசியாவின் சுந்த் ஸ்ட்ரெய்ட் (Sunda Strait) பகுதியில் சுனாமி தாக்கியதில் 168 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் சுமத்ரா தீவீல் பகுதியில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததால் சுனாமி ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் தாக்கிய இந்த சுனாமியால் . வீடுகள், மேம்பாலங்கள், சாலைகள் சேதமடைந்ததுள்ளது.
அதோடு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளதோடு . சுமார் 745 பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் பலபேரை காணவில்லை எனவும் தெரிவிக்கபப்டுகின்றது.
இந்நிலையில் காணாமல்போனோரை தேடும் பணி இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சுனாமி தாக்குதலை தேசிய பேரிடராக அறிவித்துள்ள இந்தோனேசிய அரசு, மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிட்த்தக்கது.