இனப்பிரச்சினை தீர்வுக்கான முயற்சி வெற்றிபெற, ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கோரிக்கையினை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ளார்.
திருகோணமலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.