1877 ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்தில் உலக தபால் சங்கம் முதன்முறையாக ஒன்று கூடியது. அந்தவகையில் இலங்கையின் கரையோர பகுதிகளில் முதன் முறையாக ஐந்து தபால் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. 1799 ஆம் ஆண்டு இலங்கை தபாலுக்கான கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டதுடன், வரையறுக்கப்பட்ட தபால் கட்டணம் அறிவிக்கப்பட்டது. 1832ஆம் ஆண்டு ஆசியாவின் தபால் துறைக்கு முன்னோடியாக இலங்கை தபால் சேவை காணப்பட்டது. இன்றைய நவீன யுகத்திலும் தபால் துறையின் சேவை அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது.