தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்த தீர்வுகிடைக்க வேண்டுமாயின் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதை தவிர்க்க முடியாதென பாரதிய ஜனதாக் கட்சியின் செயலாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார். மீனவர் பிரச்சினை தொடர்பில் புதுடில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், பாக்கு நீரிணையில் ஏற்கனவே சீனா காலூண்றியுள்ளது. பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் இலங்கையில் முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க இந்தியா, இலங்கையுடன் உறவை கொண்டிருப்பது அவசியமென முரளிதரராவ் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால், தமது குடும்பத்தினரின் ஊழல் தொடர்பிலேயே சிந்திக்க முடியுமென முரளிதரராவ் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.