ஆனால் போலீசார் முகாமிற்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கவில்லை என்று முகாமில்; உள்ளவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு முகாமில் மர்ம நபர்கள் அரிவாளுடன் உள்ளே நுழைந்து முகாம் தலைவர் கமலநாதன் உள்ளிட்ட 5 பேரை தாக்ககியுள்ளனர். இதில் 5 பேரும் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை கண்டித்தும் முகாமிற்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு செய்ய வலியுறுத்தியும் முகாமில் 200க்கும் மேற்படட பொதுமக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.