இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் அவர்களது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பற்று இருந்தமைக்காக அவர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாகத் கூறப்படுகின்றது.