இ.போ. ச. பஸ்மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் -கிழக்கில் சம்பவம்..

கிழக்கில் புதிய ஆளுநனராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று கிழக்கு முழுவதிலும் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்நிலையில் திருகோணமலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாதவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில்   பஸ்சின் கண்ணாடிகள் உடைந்துள்ளதாகவும்,. எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இனம்தெரியாதவர்கள்கல்வீச்சுதாக்குதல்திருகோணமலைபேருந்து
Comments (0)
Add Comment