உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசின் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது: நாராயணசாமி

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் கர்நாடக அரசு செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கர்நாடக அரசின் இந்த அணுகுமுறை, சட்டப்பேரவைக்கும், நீதிமன்றத்திற்கும் இடையே பிரச்சினையை ஏற்படுத்தும் என்றார்.

மேலும், தனது பிடிவாதப் போக்கை கர்நாடக அரசு கைவிட்டுவிட்டு, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

உச்சநீதிமன்றம்கர்நாடக அரசுகூட்டாட்சி தத்துவம்நாராயணசாமிபுதுச்சேரி
Comments (0)
Add Comment