ஊழலை எதிர்த்தால் நடவடிக்கை எடுப்பது ஏன்?: கீர்த்தி ஆசாத் கேள்வி

பாரதிய ஜனதாவில் இருந்து தாம் இடைநீக்கம் செய்யப்பட்டத்திற்கு உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார். தான் என்ன தவறு செய்தேன் என பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 ஊழலை எதிர்த்து குரல் கொடுக்கும் சுப்ரமணியன் சுவாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் பாரதிய ஜனதா கட்சி, அதே ஊழலை எதிர்க்கும் தம் மீது நடவடிக்கை எடுப்பது ஏன் என அவர் வினவியுள்ளார்.

 டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி, பொதுநல வழக்கு தொடரப்போவதாகவும் கீர்த்தி ஆசாத் கூறியுள்ளார். ஊழலுக்கு எதிராக தொடர்ந்து போராடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இடைநீக்கம்ஊழல்கீர்த்தி ஆசாத்சிபிஐ விசாரணைபாரதிய ஜனதா
Comments (0)
Add Comment