எதிர்வரும் 23 ஆம் திகதி அமைச்சரவையில் முழுமையான மாற்றங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் (15) பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளார். மீண்டும் அவர் எதிர்வரும் 23 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
இதேவேளை அமைச்சரவையில் தற்காலிகமாக 4 அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.