மாவீரர்களின் தியாகம் வீண்போகாது .தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஐநா நோக்கிய ஈருறுளிப்பயணம் எதிர்வரும் புதன்கிழமை 3.09.2014 அன்று மதியம் 12 மணிக்கு ஆரம்பிக்க இருக்கும் நிலையில் , ஐரோப்பிய தமிழ் மக்கள் இப் பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேய செயற்பாட்டாளர்களுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் அத்தோடு எதிர்வரும் 15.09.2014 அன்று ஜெனீவாவில் நடைபெற இருக்கும் மாபெரும் பேரணியில் அறுந்து போகாத நம்பிக்கையுடனும் , போராட்டத்துடனும் எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க மக்கள் அலையென கலந்து கொள்ள வேண்டும் என்றும் , அதை தொடர்ந்து தியாகி திலீபன் அண்ணா அவர்களின் நினைவு நாளில் 26.09.2014 அன்று உலகத்தமிழ் மக்கள் அனைவரும் அன்றைய தினத்தில் அடையாள உண்ணாநோன்பில் ஈடுபட்டு தமிழீழத்தை வென்றெடுக்கும் உணர்வில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் இனமான இயக்குனர் கௌதமன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
[youtube url=”https://www.youtube.com/watch?v=ur6fc_kjOak” width=”560″ height=”315″]