ஐ.ஐ.டி.விவகாரம் : டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்

சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் எனும் மாணவர் அமைப்பின்அங்கீகாரத்தை ஐ.ஐ.டி. நிர்வாகம் ரத்து செய்தது. இது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி தான் காரணம் என்று கூறி, டெல்லியில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் டெல்லி ஜந்தர்மந்தரில் ஆம் ஆத்மி கட்சியின் மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பு சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சித்தொண்டர்கள் கலந்து கொண்டு, ‘அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது’ என்று கூறி கோஷமிட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி மூத்த தலைவர் அசுதோஷ், பிரதமர் மோடியை விமர்சிப்பதற்கு மாணவர் அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

‘அங்கீகாரம் ரத்துஆம் ஆத்மி கட்சிசென்னை ஐஐடிஜனநாயகம்டெல்லிபோராட்டம்மாணவர் அமைப்பு
Comments (0)
Add Comment