மே மாதம் ஏழாம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் இந்த இரண்டு ஐ.நா. விசேட அறிக்கையாளர்களும் இலங்கையின் நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் மதிப்பீடுகளை செய்யவுள்ளனர்.
குறிப்பாக சுயாதீன நீதித்துறை, நீதிதிதுறையின் தொழில்சார் தன்மை நாட்டின் சட்ட கட்டமைப்பு ஆகியவை தொடர்பில் மதிப்பீடுகளை செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இரண்டு அறிக்கையாளர்களும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளனர்.
அத்துடன் நீதித்துறையின் சுயாதீன தன்மை மற்றும் பக்கசார்பற்ற தன்மை தொடர்பாகவும் அவற்றின் மீதான மீறல்கள் குறித்தும் ஐ.நா.வின் இரண்டு அறிக்கையாளர்களும் அவதானம் செலுத்தவுள்ளனர்.
அதுமட்டுமன்றி இலங்கையின் நீதித்துறை கட்டமைப்புக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பிலும் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் கவனம் செலுத்தவுள்ளனர்.
இது இவ்வாறிருக்க இலங்கையின் விஜயத்தை முடித்துக் கொண்ட பின்னர் சுயாதீன நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் தொடர்பான விடேச அறிக்கையாளர் மொனிக்கா பின்டோ, சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஜுவான் மென்டேஸ் ஆகியோர் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.