கடலூரில் வெள்ளத்துக்கு இதுவரை 28 பேர் உயிரிழப்பு

கடலூரில் மழை வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28ஆக உயர்ந்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.  கடந்த 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் அநேக இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் பல பேர் காணாமல் போயுள்ள நிலையில், இதுவரை 28 பேர் இறந்துள்ளதாக கடலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு ,உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

 தமிழக அரசு சார்பாக நிவாரண உதவிகள் முடக்கி விடப்பட்டுள்ள நிலையில், கடலூரை சூழ்ந்துள்ள வெள்ள நீர் வடிய இன்னும் ஒரு வார காலமாவது ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

28 பேர் உயிரிழப்புஉணவுகடலூர்கனமழைகிராமங்கள்குடிநீர்வெள்ளப்பெருக்கு
Comments (0)
Add Comment