இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை அறிவித்த நீதிபதி இதனை தெரிவித்தார். ரவிராஜ் கொலை வழக்கில் ஸ்ரீலங்கா கடற்படை உறுப்பினர்கள் இரண்டு பேர், பொலிஸ் அதிகாரி ஒருவர். மற்றும் கருணா குழுவை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு எதிராக பொலிஸார் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். இது தொடர்பில் தீர்ப்பை அறிவித்த மஜிஸ்ட்ரேட் நீதிபதி, சந்தேக நபர்களுக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்தார்.
இந்த வழக்கின் சந்தேக நபர்களில் இரண்டு பேர் தற்போது வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ளார்கள் என நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ள பொலிஸார், அவர்கள் இருவரும் கருணா குழுவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டுக்கு தப்பியோடிய இருவரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் சர்வதேச பொலிஸாருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.