ரஷியா கல்லூரியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ரஷியாவின் கிரீமியாவில் உள்ள தொழிற்பயிற்சி கல்லூரியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
.
இதில் 17 பேர் உயிரிழந்ததோடு 50 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிகப்படுகின்றது.
பலியானவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு, பயங்கரவாத தாக்குதல் என கருதப்படுகின்ற நிலையில் சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிகபட்டுள்ளது.