கியூபாவில் பயணிகள் விமானம் விபத்து…

கியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் பயணிகள் விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த   100 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த விமானத்தில்  105 பயணிகள் மற்றும் 9 விமான சிப்பந்திகள் உட்பட 114 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.

போயிங் 737  என்ற விமானம், உள்ளூர் நேரப்படி 12:08 மணியளவில், கியூபாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹொல்கூன் நகரத்திற்கு கிளம்பியுள்ளது.

இந்நிலையில், அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலையத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது.

இதையடுத்து உடனடியாக மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பயணிகளில்  பெரும்பாலோனோர் கியூபா நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், அதில் ஐந்து பேர் வெளிநாட்டவர்கள் என்றும் அரசு வலைதளமான கியூபாடிபேட் கூறியுள்ளது.

அதோடு மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஆறு விமான ஊழியர்கள் விமானத்தில் இருந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கியூபாவிபத்துவிமான ஊழியர்கள்ஹவானா விமான நிலையம்
Comments (0)
Add Comment