கிழ முதலமைச்சர் பிரதேசவாதம் பேசுவதை நிறுத்த வேண்டும்!

நான் 10 வரு­டங்­க­ளாக மத்­திய மாகாண அமைச்­ச­ராக இருந்து பாரா­ளு­மன்றம் வந்­தவன் என்ற வகையில் எனக்கு மாகாண சபையின் அதி­காரங்கள் அதன் செயற்­பா­டுகள் எல்­லாமே நன்கு தெரியும். கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் தனிப்­பட்ட அர­சியல் பிரச்­சி­னை­களில் எங்­களை இழுத்­துப்­போட வேண்டாம். பிர­தே­ச­வாதம் பேசு­வதை அவர் நிறுத்­திக்­கொள்ள வேண்டும் என கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஸ்ணன் கோரிக்கை விடுத்­துள்­ள­தாக கல்வி இரா­ஜாங்க அமைச்சின் ஊட­கப்­பி­ரிவு தெரி­வித்­துள்­ளது.

தொட­ரந்து ஊடக அறிக்­கையில்,

கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் இசட்.ஏ.நசீர் அஹமட் கல்வி இரா­ஜாங்­க ­அ­மைச்சர் மாகாண அதி­கா­ரங்­க­ளுக்கு சவால் விடுக்­கின்றார் என்ற தலைப்பில் தெரி­வித்­துள்ள கருத்­திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பின்­வ­ரு­மாறு தெரி­வித்­துள்ளார்.

கல்வி இரா­ஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் மாகாண சபை­க­ளுக்கு இருக்­கின்ற அதி­கா­ரங்­களை குறைப்­ப­தற்கோ அல்­லது அவர்­களின் செயற்­பா­டு­களில் தலை­யி­டு­வ­தற்கோ விரும்­பாத ஒருவன். காரணம் என்னை பொறுத்­த­வரை மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட வேண்டும் என்­பதை அன்று முதல் வழி­யு­றுத்தி வரு­பவன். மாகாண சபையில் நானும் 10 வரு­டங்­க­ளாக அமைச்­ச­ராக இருந்­தி­ருக்­கின்றேன்.

ஆனால் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் தெரி­வித்­தி­ருக்கும் கருத்­தா­னது முற்­றிலும் பிழை­யான ஒரு விட­ய­மா­கவே நான் கரு­து­கின்றேன். அர­சியல் அனு­பவம் அர­சியல் முதிர்ச்சி இல்­லாத ஒரு­வ­ரு­டைய செயற்­பா­டா­கவே நான் இதனை கரு­து­கின்றேன். மேடை பேச்சு என்­பது நாக­ரீ­க­மாக இருக்க வேண்டும். நமது கருத்­துக்கள் ஊட­கங்கள் வாயி­லாக பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சென்­ற­டை­கின்ற கார­ணத்தால் என்ன பேசு­கின்றோம் எங்கே பேசு­கின்றோம் என்­பதை தெரிந்­து­கொண்டு பேசு­வது மிகவும் பொருத்­த­மாக இருக்கும்.

நான் கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் கூறு­வது போல் ஒரு இரவில் வந்து திறப்பு விழா செய்­து­விட்டு சென்­றவன் அல்ல. மூன்று நாட்­க­ளாக கிழக்கு மாகா­ணத்தில் திருக்­கோயில் தம்­பி­லுவில் மத்­திய மகா வித்­தி­யா­லயம், அக்­க­ரை­பற்று இரா­ம­கி­ருஸ்ணன் மத்­திய வித்­தி­யா­லயம், மட்­டக்­க­ளப்பு வின்சன் உயர் மகளீர் கல்­லூரி, மட்­டக்­க­ளப்பு இந்து கல்­லூரி. நாவற்­காடு நாமகள் வித்­தி­யா­லயம், கிரன் மத்­திய மகா வித்­தி­யா­லயம், ஓட்­ட­மா­வடி மத்­திய மகா வித்­தி­யாலம் உட்­பட அட்­டா­ளைச்­சேனை ஆசி­ரியர் பயிற்சி கலா­சாலை, தேசிய கல்­வியல் கல்­லூரி, மட்­டக்­க­ளப்பு மத்­திய கல்­லூரி, மட்­டக்­க­ளப்பு சென் மைக்கள் கல்­லூரி, மட்­டக்­க­ளப்பு ஆசி­ரியர் கலா­சாலை போன்­ற­வற்றில் நடந்த நிகழ்ச்­சி­க­ளிலும் கூட்­டங்­க­ளிலும், குறை நிறை­களை கண்­ட­றி­வ­திலும் திறப்பு விழாக்­க­ளிலும் கலந்து கொண்டேன்.

என்­னுடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஸ்ரீநேசன், கோடீஸ்­வரன், சீனித்­தம்பி யோகேஸ்­வரன் மற்றும் இறுதி நாள் நிகழ்வில் பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் மாகாண சபை உறுப்­பி­னர்கள் கிழக்கு மாகாண கல்வி பணிப்­பாளர் எம்.டி.ஏ.நிசாம் ஆகி­யோரும் கலந்து கொண்­டனர். பாட­சா­லை­களில் நடை­பெற்ற திறப்பு விழா தொடர்­பாக ஏற்­கவே எனது அமைச்சின் மூலம் முத­ல­மைச்­ச­ருக்கு அறி­விக்­க­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் அறி­வித்­துள்­ள­னர.் பாட­சாலை அதி­பர்கள் தனி­பட்ட ரீிதியில் அழைப்­பிதல் வழங்­கி­யுள்­ளார்கள். முத­ல­மைச்­சரின் பெயரை அழைப்­ப­தலில் போடு­வ­தற்கு அதி­பர்­களால் அனு­மதி பெறப்­பட்ட பின்பே அழைப்­பி­தழ்கள் அச்­சி­ட­பட்­டுள்­ளன. திறப்பு விழாக்கள் செய்­யப்­பட்ட பாட­சா­லை­களில் திறப்பு பல­கை­களில் கிழக்கு மாகாண முத­ல­மைச்­சரின் பெயரும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந் நிலையில் கிழக்கு மாகா­ணத்தின் முத­ல­மைச்­சரின் அறிக்கை கேலிக்­கூத்­தா­கவே இருக்­கின்­றது.

அது மட்­டு­மல்­லாமல் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்­டா­யு­த­பாணி சுச­வீனம் கார­ண­மாக அனைத்து நிகழ்­வு­க­ளுக்கும் வர­வில்லை. ஆனால் தனது ஆசிச் செய்­தி­யையும் அனுப்பி வைத்­தி­ருந்­த­மையும் அதனை அதி­பர்கள் நிகழ்­வு­களில் வாசித்­தமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது. அப்­ப­டி­யானால் ஒரு முத­ல­மைச்­ச­ருக்கு தனது மாகா­ணத்தில் என்ன நடக்­கின்­றது என்­பதே தெரி­யாமல் அவர் இருக்­கின்­றாரா? என்ற கேள்வி எனக்கு எழு­கின்­றது.

மேலும் அவ­ரு­டைய இந்த கருத்­திற்கு முக்­கிய காரணம் கடை­சி­யாக கடந்த 03.02.2016 அன்று மாலை இடம்­பெற்ற ஒட்­ட­மா­வடி தேசிய பாட­சா­லையின் திறப்பு விழா­வாகும். இந்த நிகழ்வில் என்னை பங்­கு­பற்ற வேண்டாம் என கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் இசட்.ஏ. நசீர் அஹமட் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு கேட்­டுக்­கொண்டார். அவர் அதற்கு சில அர­சியல் கார­ணங்­களை கூறினார். ஆனால் என்னால் அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யாமல் போய்­விட்­டது. காரணம் குறித்த பாட­சா­லையில் அதிபர் உட்­பட அந்த பாட­சா­லையின் நிர்­வா­கத்­தி­னரும் இணைந்து ஒரு நிகழ்வை மிகுந்த சிர­மத்­திற்கு மத்­தியில் ஏற்­பாடு செய்­தி­ருக்­கின்­றனர். அவ்­வா­றன ஒரு நிலையில் நான் அங்கு செல்­லாமல் விட்டால் அது அந்த மாண­வர்­களின் மன நிலையை பெரிதும் பாதிக்­கப்­படும். அது மட்­டு­மல்­லாமல் அந்த ஆய்வு கூடத்தின் பலன்­களை மாண­வர்கள் பெற்றுக் கொள்ள முடி­யாத ஒரு நிலை ஏற்­படும். எனவே இவை அனைத்­தையும் கருத்தில் கொண்டும் அந்த பாட­சா­லையின் பழைய மாண­வரும் பிரதி அமைச்­ச­ரு­மான அமீர் அலி என்னை தனிப்­பட்ட முறையில் அங்கு அழைத்­தி­ருந்தார். எனவே இவ்­வாறன் ஒரு நிலையில் நான் கலந்து கொள்­ளாமல் இருப்­பது எந்­த­வி­தத்தில் நியா­ய­மா­னது என எனக்கு புரி­ய­வில்லை.

 அது மட்­டு­மல்­லாமல் அது ஒரு தேசிய பாட­சாலை அந்த பாட­சா­லைக்கு எமது அமைச்சின் மூல­மாக ஓரு கோடியே 95 இலட்சம் ரூபா கடந்த ஆண்டில் வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் குறித்த பாட­சா­லையின் 100 ஆவது ஆண்டு நிறைவு விழா மிக விரைவில் நடை­பெ­ற­வுள்­ளது. அதற்­கான ஒரு கலந்­து­ரை­யாடல் ஒன்றும் அந்த பாட­சாலை நிர்­வா­கத்­தி­னரால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இப்­படி பல நிகழ்­வுகள் அங்கே ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

நான் அங்கு விஜயம் செய்த காலப்­ப­கு­தியில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பல மாகாண பாட­சா­லை­க­ளையும் பார்­வை­யிட்டேன். இது தொடர்­பாக நான் எமது பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யாடல் ஒன்­றையும் செய்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ளேன். மேலும் நான் அங்கு கிழக்கு மாகா­ணத்தில் வந்து ஒரு பொழுதும் அர­சியல் செய்யும் எண்­ணமும் எனக்கு இல்லை. நாங்கள் எல்­லோரும் ஒரு மொழியை பேசு­கின்­ற­வர்கள் நாங்கள். இந்த நாட்டில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே நமது சமூகத்தின் வளர்ச்சிக்காக நாம் சேவை செய்ய முடியும்.

ஏன்னை பொறுத்த வரை நான் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் அக்கீமுடனும் அதேபோல அமைச்சு றிசாட்பதூர்தினுடனும் பிரதி அமைச்சருமான அமீர் அலிவுடனும் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களுடனும் பாராளுமன்ற மற்றும் மாகான சபை உறுப்பினர்களுடனும் ஒரு சுமுகமான உறவை கொண்டவன் என்ற வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இவ்வாறு கருத்துக்களை வௌியிடுவதானது எமது இரண்டு சமூகங்களுக்கும் இடையில் தேவையற்ற விடயங்களை உருவாக்கும்.

கிழ முதலமைச்சர்நிறுத்தபிரதேசவாதம்பேசுவதைவேண்டும்
Comments (0)
Add Comment