குஜராத் பட்டேல் சமூகப் போராட்டம் : வாட்ஸ் ஆப்பை முடக்கியது மாநில அரசு

குஜராத் அகமதாபாத் நகரில் பட்டேல் சமூகத்தினரின் போராட்டம் காரணமாக இணையத்தள பயன்பாட்டினை குஜராத் மாநில  அரசு முடக்கியுள்ளது.

சில நாட்களாக பட்டேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி  குஜராத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அகமதாபாத் மற்றும் சூரத் போன்ற நகரங்களில் வன்முறை வெடித்தது.

குஜராத்தில் நடைபெறும் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் 22 வயதான ஹர்டிக் பட்டேல் வாட்ச்ஆப் மற்றும் முகநூல் வாயிலாக போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதால் கடந்த 25ஆம் தேதி முதல் வரும் 28ஆம் தேதி வரை அகமதாபாத் நகரில் இணையத் தள பயன்பாடுகளை அம்மாநில அரசு முடக்கியுள்ளது.

மேலும் குஜராத்தின் 6ஆவது மிகப் பெரிய நகரமாகவும், இந்தியாவின் 7ஆவது மிகப் பெரிய நகரமாகவும் விளங்கும் அகமதாபாத் நகரில் 6.3 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அகமதாபாத்இட ஒதுக்கீடுகுஜராத்பட்டேல் சமூகத்தினர்மாநில அரசுவாட்ஸ் ஆப்ஹர்டிக் பட்டேல்
Comments (0)
Add Comment