இந்நிலையில் மேற்படி குறை மாதத்தில் பிரசவமாகும் குழந்தைகளுக்கு தாயின் கருப்பையில் இருப்பதைப் போன்ற நிலைமையை ஏற்படுத்தி அவற்றின் உயிரைக் காப்பாற்ற செயற்கை நச்சுக் கொடியொன்றை வடிவமைத்துள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் உரிமைகோரியுள்ளனர்.
மனிதர்களால் உருவாக்கப்பட்ட இந்த நச்சுக் கொடி பம்பியொன்றைப் பயன்படுத்தி செயற்கை நுரையீரல் ஒன்றினூடாக குருதியை அனுப்பி சுத்திகரித்த பின் அதனை குழந்தையின் குருதிச் சுற்றோட்டத்திற்கு அனுப்புகிறது.
அத்துடன் அந்த நச்சுக் கொடி காற்றோட்ட இயந்திரத்தின் உதவியின்றி குழந்தைக்குத் தேவையான வளியையும் பரிமாற்றம் செய்கிறது.
வழமையான பிரசவங்கள் சுமார் 40 வார காலம் வரை நீடிக்கின்ற நிலையில், கருத்தரித்து 37 வாரத்துக்கு முன் பிறக்கும் குழந்தைகள் உயிராபத்தை எதிர்கொண்டு வருகின்றன.
மேற்படி பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக மிக்சிக்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த செயற்கை நச்சுக் கொடியை வடிவமைத்துள்ளனர்.