கடந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலை பிரகடனப்படுத்தாதிருந்தால் முன்னாள் ஜனாதிபதியே தற்போதும் ஜனாதிபதியாக இருந்திருப்பார். நாட்டுக்குள்ளும் சர்வதேசத்திலும் ஏற்பட்டிருந்த சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாத நிலை அன்று ஏற்பட்டிருந்தது. இதனால்தான் விடை காண முடியாத பிரச்சினைகளுக்கு விடை காணும் வகையில் அவசர தேர்தல் ஒன்றை பிரகடனப்படுத்தும் நிலை அன்றைய ஜனாதிபதிக்கு ஏற்பட்டது. ஆனாலும் ஆட்சிக்கு வந்த நாம் கடந்த அரசாங்கத்தினால் விடை கூறமுடியாதிருந்த வினாக்களுக்கும் விடையளித்துள்ளோம் என்றும் மைத்திரி சுட்டிக்காட்டினார்.
சர்வதேச ரீதியில் எமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க வேண்டுமாயின் எமது நாட்டின்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வேண்டுமாயின் எமது நாட்டின்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்குள்கு உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையை வெளிப்படுத்தி அக்குற்றச்சாட்டுக்களிலிருந்து மீள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நமது நாட்டின் இறைமைக்கு குந்தகம் விளைவிக்கும் எமது நாட்டுக்கு பாதகமாக அமையும் எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்போவதில்லை என மிகத்தெ ளிவாக கூறவிரும்புகிறேன்.
ஆகையால் எவரும் எந்தவொரு பீதியும் கொள்ளத்தேவையில்லை. ஒருபோதும் நாம் இந்த நாட்டை எவருக்கும் தாரைவார்த்துக் கொடுக்கமாட்டோம் என்பதையும் அதனை செய்ய நாம் ஆட்சிக்கு வரவில்லை என்பதனையும் இந்த நாட்டின் நன்மைக்காக பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காகவும் நாட்டை முன்னேற்றுவதற்காகவுமே நாம் ஆட்சிக்கு வந்தோம் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.