அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த 16 வயதான ஹன்ஷனி என்ற மாணவியே கேக் விஷமானதில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதன்போது அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அநுராதபுரம் , கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் வீட்டுக்கு வந்த உறவினர்களுடன் உட்கொண்ட கேக் விஷமானதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 16 வயதான ஹன்ஷனி என்ற பாடசாலை மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வந்த குறித்த மாணவி இம்முறை கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு இருந்தவர்.
இந்த சம்பவம் கடந்த 14 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவி சுகயீனம் முற்றதை அடுத்து உறவினர்களினால் சீபி குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மாற்றப் பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமையன்று உயிரிழந்துள்ளார்.