இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிக்க கோரி கேப்பாப்பிலவு மக்கள் கடந்த பல மாதங்களாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமது காணியை விடுவிக்க போராடும் தாயுடன் சிறுவன் ஒருவனும் இரவு, பகல் பாராது வீதியில் உறங்கி போராடும் பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளான்.
எனினும், அவர்களின் கோரிக்கை தொடர்பில் இதுவரையில் தீர்வுகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இராணுவ முகாமை முற்றுகையிட்டு கேப்பாபிலவு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.