அண்மையில் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளினால் நடாத்தப்பட்ட தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட பலர் உயிரிழந்திருந்தனர்.
இந்நிலையில் கொழும்பில் உள்ள பாலங்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் தகர்க்கத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான ஏவ்பி செய்தி வெளியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய பலர் இன்னமும் கைது செய்யப்படாமல் உள்ளதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.