சம்பூர் கடற்கரையில் குவிந்த டொல்பின் மீன்கள்!

சம்பூர் கடற்கரையில் இன்று பகல் வேளையில் அதிகளவு டொல்பின் மீன்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய அளவிலான இந்த மீன்கள் திடீரென இவ்வாறு கடற்கரையில் குவிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடற்படையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து டொல்பின் மீன்களை மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

ஆழ் கடலில் வாழும் டொல்பின்கள் கடற்கரைக்கு வந்தமைக்கான காரணம் இதுவரையிலும் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

சம்பூர்டொல்பின் மீன்கள்பிரதேச மக்கள்
Comments (0)
Add Comment