சிறை உணவை மறுக்கிறாராம் யோசித!

சிஎஸ்என் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிமோசடிகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்;டுள்ள ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியின் மகன் யோசித உட்பட நால்வர் சிறைச்சாலை உணவை உட்கொள்வதற்கு மறுத்துவிட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் துசாரஉபுல் தெனிய தெரிவித்துள்ளார்.
 
அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து உணவை பெறுவதற்கான அனுமதியை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.முதல் நாள் சிறைச்சாலை உணவை உட்கொள்வதற்கு இணங்கிய அவர்கள் மறுநாள் அதனை உட்கொள்ளமறுத்துள்ளனர்,
 
இதனை தொடர்ந்து வெளியிலிருந்து உணவை பெறுவதற்கான அவர்களது கோரிக்கையை சிறைச்சாலை திணைக்களம் ஏற்றுக்கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மகிந்தயோசிதராஜபக்சராஜபக்சக்கள்
Comments (0)
Add Comment