சிலாப கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களிற்கு, வழமைக்கு மாறாக பெருந்தொகை மீன்கள் பிடிபட்டுளள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
இதுவொரு அபூர்வ நிகழ்வு என மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
பருவ மழை ஆரம்பித்த போதிலும் பல்வேறு வகை மீன்கள் பாரியளவில் திடீரென சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த மீன் வகை ஒரு கிலோ கிராம் 200 – 300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இதற்கு முன்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்த அளவு மீன் சிக்கியதில்லை என மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது,