சென்னையில் நடைபெறவுள்ள மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்காக இலங்கையில் இருந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 10 மீனவ பிரதிநிதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
எதிர்வரும் 24ம் மற்றும் 25ம் திகதிகளில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவுள்ளது.
இந்திய இலங்கை மீனவர் நலன்புரி அமைப்பின் ஆலோசகர் எஸ்.பி.அந்தோனிமுத்து இதனைத் தெரிவித்துள்ளார். அவர்களுடன் 5 மீன்பிடித்துறை அதிகாரிகளும் எதிர்வரும் திங்கட் கிழமை இந்த பேச்சுவார்த்தைக்காக சென்னை செல்வதாக அவர் கூறியுள்ளார்.