செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சி செய்துவரும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம், அவ்வப்போது வியப்பூட்டும் தகவல்களை வெளியிட்டு வருகிறது.
இதில் மேலும், ஒரு ஆச்சரியமூட்டும் கண்டுபிடிப்பாக, பூமியில் 52 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடல் உயிரினம் இருப்பதை புகைப்படம் எடுத்து நாசா வெளியிட்டுள்ளது.
அந்த புகைப்படத்தில், முட்டை வடிவிலான(Oval Shape) இரண்டு கற்கள் இருக்கிறது, அதன் தோற்றத்தை பார்க்கையில், Triloytes(படிமங்கள் வகை உயிரினத்தை சேர்ந்தது – Fossils) என்ற விலங்கினம் போன்று இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
2 Triloytes படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த Triloytes உயிரினம் பல்வேறு வாழ்க்கை முறையை கொண்டுள்ளது, ஒட்டுண்ணி போன்று பிற உயிரினத்தை சுரண்டி வாழ்வது, கடலுக்கடியில் வசிப்பது போன்றவை அடங்கும்.