யாழ் மானிப்பாயில் வீதி சோதனையில் இருந்த பொலிஸார் சந்தேக நபர் என்ற அடிப்படையில் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விசாரணை என்ற பெயரில் குறித்த இளைஞனை காட்டுமிராண்டி தனமாக பொலிஸார் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
மேலும் இளைஞனை தாக்கிய பொலிஸார் மது போதையில் இருந்தாக பாதிக்கபட்ட இளைஞன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.