கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் ஜல்லிக்கட்டு குறித்து கருத்து தெரிவிக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும், பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.