ஜூன் 27 : சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல்!

வருகின்ற ஜூன் 27-ந் தேதி சென்னை ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.  இதனையடுத்து , ஜூன் 3 -ந்  தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஜூன் 10ந் தேதி வரை வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

அதன்பின்னர் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 11ந் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூன் 13-ந் தேதி கடைசி நாளாகும். இறுதியாக ஜூன் 30-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஆர்கே நகர் தொகுதி உறுப்பினர் வெற்றிவேல் ராஜினாமா செய்ததை அடுத்து அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆர்.கே நகர் தொகுதிஇடைத்தேர்தல்தேர்தல் ஆணையம்விதிமுறைகள்வேட்புமனுத் தாக்கல்
Comments (0)
Add Comment