சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அதிமுக செயற்குழு ,பொதுகுழு கூட்டத்திற்க்காக வைக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதாவின் பேனரைக் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் ஒரு பிரிவினரான அறப்போர் இயக்கத்தினர் அகற்ற முயன்றனர். இதனை தடுக்க முயன்ற அதிமுக- வினருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், அறப்போர் இயக்கத்தின் மூன்று பேரைக் கைது செய்தனர்.