போதிய தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகியது. இதனால் தமிழரசி வேதனையில் இருந்தார். வயலுக்கு சென்று திரும்பிய அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
மயிலாடுதுறை அருகே உள்ள கொடவிளாகம் ஊராட்சி கேவஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (60). இவர் 5 ஏக்கரில் நெல் பயிரிட்டு இருந்தார். பயிர் கருகியதால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த பூவலூரை சேர்ந்தவர் சுப்பையன் (60). இவர் 2 ஏக்கரில் சம்பா பயிரிட்டு இறந்தார். பயிர் கருகியதால் மனம் உடைந்து காணப்பட்ட அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.