”தனித்தமிழீழம் ஒன்றே தீர்வு” மற்றும் உலகமே எதிர்த்தாலும் தாய்த் தமிழகம் தனித் தமிழீழத்திற்கு துணை நிற்கும் என்பதை வலியுறுத்தும் வகையில் கருத்தரங்கம் ஒருங்கிணைக்கப்படுள்ளது. தமிழகம் மற்றும் புதுவை மாணவர் மற்றும் இளையோர் நடத்தும் இன எழுச்சி கருத்தரங்கம் நாளை (05-07-2015) சென்னையிலுள்ள சந்திர சேகர் திருமண மண்டபம் மேற்கு மாம்பலத்தில் நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கத்தில் உணர்ச்சிக் கவிஞர்.காசி ஆனந்தன், மக்கள் கவிஞர்.இன்குலாப், மருத்துவர்.எழிலன் உட்பட பலர் கலந்துக்கொண்டு உரையாற்ற உள்ளனர்.